Thursday, May 6, 2010

இறந்தவர்களில் செல்பேசி எண்..

இறந்தவர்களில் செல்பேசி எண்...

ஒரு நொடிப்பொழுதில்
வந்த அந்த அழைப்பு
ஒரு இரங்கல் செய்தி தாங்கி வந்தது...

இறந்தது போன அவருக்கான
வருத்தங்களோடு
கடந்து போகின்றன சில நாட்கள்...

அவரின் நினைவுகள்
அகன்று விட்டன..

மாதம் பல ஆகியும்
இறந்தவரின் பெயரும்
செல்பேசி எண்ணும்
அழிபடாமலே என்னுடன் உள்ளன..

ஒரு நாள் கனவில்
நான் அவரின் எண்ணிற்க்கு
அழைக்கிறேன்..

அவரோ சடலமாக
என் அழைப்பை பார்த்திருக்கும்
வேளையில் வந்தது விழிப்பு..

மற்றுமொரு பரபரப்பான நாளில்..
ஒரு நொடிப்பொழுதில்
வந்த அந்த அழைப்பு

இறந்தவரின் பெயர் தாங்கி..


நான் அழைப்பை ஏற்க்கவில்லை...


கார்த்தி...

Tuesday, January 12, 2010

என் தமிழ் வாழ்த்து….

எல்லோருக்கும் எல்லாம் அளித்த என் தமிழுக்கும், தமிழருக்கும் என் இதயம் கனிந்த

  • · தமிழர் திருநாள்
  • · தை திருநாள்
  • · உழவர் திருநாள்
  • · வள்ளுவர் தினம்
  • · மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்…

பல பல யுகங்களாய், கல் தோன்றி, மண் தோன்றா காலத்திலே முன் தோன்றியதாக கூறப்படும் என் தமிழுக்கும், என் தமிழை உணர்ந்தோருக்கும், அறிந்தோருக்கும், தமிழருக்கும், மற்றும் யாவரும் கேளிர் என் தமிழ் வாழ்த்து….

அறிவியல் அறிந்தோம்..

அன்பை மறந்தோம்…

மென்பொருள் எழுதினோம்…

தமிழ் எழுத்துகளை மறைத்தோம்…

மேலும் பணம் பெற்றோம்..

ஒழுக்கத்தை இழந்தோம்..

ஆண், பெண் கலந்தோம்

மக்கள் தொகை வளர்த்தோம்…

செல் பேசினோம்..

சொற்க்களை மறந்தோம்..

தொழில் நுட்பங்களை மணந்து

சொந்தங்களை விவாகரித்தோம்..

இலக்கியத்தை மறந்து

இணையத்தில் பறந்தோம்…

கவிதையை மறந்து

கதைகளை அளந்தோம்…

குறுந்தகவலில்

குற்றங்களை மறைத்தோம்..

காலம் உருண்டோடும் ….

கவலை பறந்தோடும் ….

தமிழ் அறியனை ஏறும்…

தமிழ் அறியனை ஏற்றும்…

ஈரம் பிறப்பில்

ஈழம் பிறக்கும்….

எம் தமிழர்தம் நெஞ்சில் ஈரம் பிறந்தால் ….

என்றும் தமிழோடு..

தி.கார்த்தி.

வளத்தூர்.